search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை தாக்குதல் மூலம் மோடியை கொல்ல சதி - மாவோயிஸ்டுகள் கடிதத்தால் அம்பலம்
    X

    தற்கொலை தாக்குதல் மூலம் மோடியை கொல்ல சதி - மாவோயிஸ்டுகள் கடிதத்தால் அம்பலம்

    ராஜீவ் காந்தியை கொன்றது போன்று மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருக்கும் தகவல் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தால் அம்பலமாகி உள்ளது. #Maoists #Modi
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உடல் சிதறி பலியானார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப்படை தாக்குதலிலேயே ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார்.



    அதே பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ரோனா ஜேக்கப் என்பவர் பிடிபட்டார். அவருடன் மாவோயிஸ்டு இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் 4 பேரும் பிடிபட்டனர்.

    ரோனா ஜேக்கப்பிடம் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில்தான் ராஜீவ் காந்தியை போன்று மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருக்கும் தகவல் இடம் பெற்றிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மகாராஷ்டிர மாநில போலீசார் ரோனா ஜேக்கப் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும் மனு செய்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பொது மக்களோடு பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உளவு பிரிவினர் மாநில போலீசாரையும் உஷார்படுத்தியுள்ளனர். இனி வரும் காலங்களில் பிரதமர் மோடி பொது மக்களோடு கலந்துரையாடும் நிகழ்ச்சிகளில் மத்திய போலீசாரும் மாநில போலீசாரும் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    பிரதமரை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதி திட்டம் தீட்டியதற்கான காரணம் என்ன? என்பதும் தெரிய வந்துள்ளது. பிரதமராக பதவியேற்ற பின்னர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

    சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட மத்திய அரசு திட்டம் தீட்டியது. இதனால் ஏற்பட்ட ஆத்திரமே பிரதமரை மோடியை கொலை செய்யும் அளவுக்கு மாவோயிஸ்டுகளின் மனதை தூண்டி இருப்பதும் அம்பலமாகி உள்ளது. #Maoists #Modi
    Next Story
    ×