search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசாவில் சிறுமியை கற்பழித்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை
    X

    ஒடிசாவில் சிறுமியை கற்பழித்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை

    ஒடிசாவில் சிறுமியை கற்பழித்த வழக்கில் 5 பேருந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கற்பழிப்பு சம்பவம் நடந்த 30 நாளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
    சம்பல்பூர்:

    ஒடிசாவில் சாசன் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் அவளை மிரட்டி கற்பழித்தது. இதனால் அவமானம் அடைந்த அவள் தற்கொலை செய்து கொண்டாள்.

    சம்பல்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்‌ஷல் ராஜா, டினு சாஹூ, ஹாடு பஞ்சாபியர், ஆசீர்வாத் பெகரா, அபிலாஷ் பஞ்சாபிசர் மற்றும் சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது விரைவு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து 15 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

    வழக்கு விசாரணை முடிந்த நிலையில் குற்றவாளிகள் அப்‌ஷல் ராஜா, டினு சாஹூ உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கற்பழிப்பு வழக்கில் கைதான 6-வது குற்றவாளி சிறுவன் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

    கற்பழிப்பு சம்பவம் கடந்த மாதம் (மே) 2-ந்தேதி நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு நியாயம் வேண்டியும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் சம்பல்பூர் போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் அரோராஅதிதீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டார். அதன் விளைவாக சம்பவம் நடந்த 30 நாளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. #Tamilnews
    Next Story
    ×