search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடி தாக்கி ஒரே நாளில் 15 பேர் உயிரிழப்பு
    X

    உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடி தாக்கி ஒரே நாளில் 15 பேர் உயிரிழப்பு

    உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் உட்பட பல பகுதிகளில் நேற்று இடி, மின்னல் தாக்கியதன் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். #rainkills
    லக்னோ:

    வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இடி மின்னல் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் மரங்கள், வீடுகள் இடிந்து விழுகின்றன. இதனால் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து தவிக்கின்றனர். அரசும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக மொராதாபாத், முசாபர்நகர், மீரட், அம்ரோஹா மற்றும் சம்பால் ஆகிய மாவட்டங்களில் இடி தாக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட 9 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #rainkills
    Next Story
    ×