search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இடி மின்னலுடன் கனமழை - 29 பேர் உயிரிழப்பு
    X

    பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இடி மின்னலுடன் கனமழை - 29 பேர் உயிரிழப்பு

    பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுக்கு 17 பேர் பலியாகி உள்ளனர்.
    பாட்னா:

    பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதன் காரணமாக குடிநீர் சப்ளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இடி மின்னல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். பீகாரில் மட்டும் பல்வேறு இடங்களில் இடி மின்னலுக்கு 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதேபோல் ஜார்க்கண்டில் 12 பேர் உயிரிந்துள்ளனர். 28 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநிலத்தில் ஜூன் 12-ம்தேதி வரை பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. 
    Next Story
    ×