search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜவஹர்லால் நேரு நினைவுநாள் - ராகுல், மன்மோகன்சிங் மலர்தூவி அஞ்சலி
    X

    ஜவஹர்லால் நேரு நினைவுநாள் - ராகுல், மன்மோகன்சிங் மலர்தூவி அஞ்சலி

    இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவுதினத்தையொட்டி, டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #JawaharLalNehru #deathanniversary #leaderspaytribute
    புதுடெல்லி:

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற பண்டிதர் ஜவஹர்லால் நேரு 27.5.1964 அன்று இயற்கை எய்தினார். அவர் மறைந்த 54-வது நினைவுதினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அங்கு நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.



    இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் நேருவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். #JawaharLalNehru #deathanniversary #leaderspaytribute
    Next Story
    ×