search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
    X

    கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

    கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ள குமாரசாமி அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. #Karnataka #Kumaraswamy #Congress
    பெங்களூர்:

    சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன.

    இதற்கிடையே, மஜத தலைவர் குமாரசாமி இன்று முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். இன்று மாலை விதான் சவுதாவில் அவர் பதவியேற்கிறார். மேலும், துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான பரமேஸ்வராவும் அவருடன் பதவியேற்க உள்ளார்.

    இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்ற பிறகு மற்ற மந்திரிகள் பதவியேற்பார்கள் என கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர். #Karnataka #Kumaraswamy #Congress
    Next Story
    ×