search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பெண் வீராங்கனை மனிஷா வாக்மர் சாதனை
    X

    எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பெண் வீராங்கனை மனிஷா வாக்மர் சாதனை

    மகாராஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத் நகரைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனை மனிஷா வாக்மர் எவரெஸ் சிகரத்தின் மீது ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். #ManishaWaghmare #MountEverest
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத் நகரில் உள்ள மரத்வாடா பகுதியைச் சேர்ந்தவர்  மனிஷா வாக்மர். இவர் இந்திராபாய் பதக் மகிளா கல்லூரியில் விளையாட்டுத்துறை தலைமை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மிகச்சிறந்து மலையேற்ற வீராங்கனை.

    இவர் பல உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை மிக உயரமாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி மனிஷா புதிய சாதனை படைத்தார். நேற்று இரவு தனது பயணத்தை தொடங்கிய மனிஷா, எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் மரத்வாடா பகுதியைச் சேர்ந்த பெண் என்ற பெருமை பெற்றுள்ளார்.


    மனிஷா விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு மகாராஷ்டிரா அரசு சிவ் சத்ரபதி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ManishaWaghmare #MountEverest

    Next Story
    ×