search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் முன்னாள் தூதர் மாதுரி குப்தா குற்றவாளி- டெல்லி கோர்ட் தீர்ப்பு
    X

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் முன்னாள் தூதர் மாதுரி குப்தா குற்றவாளி- டெல்லி கோர்ட் தீர்ப்பு

    பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்காக உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தூதரக அதிகாரி மாதுரி குப்தா குற்றவாளி என டெல்லி கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் மாதுரி குப்தா. இவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததால் கடந்த 2010ம் ஆண்டு டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தகவல்களை அனுப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மாதுரி குப்தா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர் குற்றவாளி என நீதிபதி சித்தார்த் சர்மா தீர்ப்பு வழங்கினார். 

    தண்டனை தொடர்பான வாதங்கள் நாளை நடைபெற உள்ளது. அதன்பின்னர் மாதுரி குப்தாவுக்கான தண்டனை அறிவிக்கப்படும்.  #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI
    Next Story
    ×