என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் 26 மாவட்டங்களை புழுதி புயல் நாளை தாக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Byமாலை மலர்13 May 2018 12:00 PM GMT (Updated: 13 May 2018 12:00 PM GMT)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களை மணிக்கு 70 கிமீ வேகத்தில் நாளை புழுதி புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #UPDustStorm
லக்னோ:
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்த புழுதி புயலினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதோடு, பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களை மணிக்கு 70 கிமீ வேகத்தில் நாளை புழுதி புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர், வாரனாசி, கோரக்பூர், பைசாபாத், அம்பேத்கர் நகர், அலகாபாத், மிர்சாபூர் உள்ளிட்ட மாவட்டங்களை புழுதி புயல் தாக்கும் என கூறப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்தன் வாரம் வீசிய புழுதி புயல் காரணமாக 134 பேர் உயிரிழந்ததோடு, 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மே 9-ம் தேதி வீசிய புயலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #UPDustStorm
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X