search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலு வீட்டுக்கு சென்று மணமக்களை வாழ்த்திய ராம்தேவ்
    X

    லாலு வீட்டுக்கு சென்று மணமக்களை வாழ்த்திய ராம்தேவ்

    பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலுவின் மகன் தேஜ் பிரதாப்பை யோகா குரு ராம்தேவ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #LaluPrasad #Tejpratap #Ramdev
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் லாலுபிரசாத் யாதவ். மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற இவர் சிறையில் இருந்து வருகிறார். இவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். முன்னாள் துணை முதல் மந்திரியாக இருந்தார்.

    இதற்கிடையே, தேஜ் பிரதாப் யாதவுக்கும், பீகாரின் முன்னாள் மந்திரி சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நிச்சயமானது. இவர்களது திருமணம் இன்று நடைபெற உள்ளது. 



    இந்நிலையில், யோகா குரு ராம்தேவ், நேற்று லாலு பிரசாத் வீட்டுக்கு சென்று, தேஜ் பிரதாப் யாதவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து ராம்தேவ் கூறுகையில், மணமக்களான தேஜ் பிரதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக இங்கு வந்தேன். அத்துடன், லாலுவின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தேன். தொடர்ந்து அவரை யோகா செய்து வருமாறு கூறினேன் என தெரிவித்தார். #LaluPrasad #Tejpratap #Ramdev
    Next Story
    ×