என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்கண்ட் சட்டசபை - இரு தொகுதிகளுக்கு 28-ம் தேதி இடைத்தேர்தல்
Byமாலை மலர்4 May 2018 2:35 PM GMT (Updated: 4 May 2018 2:35 PM GMT)
ஜார்கண்ட் சட்டசபையில் காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Jharkhandassembly #Bypolls
ராஞ்சி:
81 இடங்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் கோமியா மற்றும் சில்லி தொகுதி எம்.எல்.ஏ.க்களாக பதவி வகித்துவந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்கள் யோகேந்திரா மாஹ்ட்டோ, அமித் மாஹ்ட்டோ ஆகியோருக்கு சமீபத்தில் வெவ்வேறு வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கலுக்கு வரும் 10-ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனைக்கு 11-ம் தேதி மற்றும் 14-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சட்டசபையில் காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று அம்மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மேற்கண்ட இரு தொகுதிகளிலும் 28-ம் தேதி காலை 7 மணியில் இருந்து மாலை 3 மணிவரை பதிவாகும் வாக்குகள் 31-ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி கியாங்ட்டே தெரிவித்துள்ளார். #Jharkhandassembly #Bypolls
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X