search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்கண்ட் சட்டசபை - இரு தொகுதிகளுக்கு 28-ம் தேதி இடைத்தேர்தல்
    X

    ஜார்கண்ட் சட்டசபை - இரு தொகுதிகளுக்கு 28-ம் தேதி இடைத்தேர்தல்

    ஜார்கண்ட் சட்டசபையில் காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Jharkhandassembly #Bypolls
    ராஞ்சி:

    81 இடங்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் கோமியா மற்றும் சில்லி தொகுதி எம்.எல்.ஏ.க்களாக பதவி வகித்துவந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்கள் யோகேந்திரா மாஹ்ட்டோ, அமித் மாஹ்ட்டோ ஆகியோருக்கு சமீபத்தில் வெவ்வேறு வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    வேட்புமனு தாக்கலுக்கு வரும் 10-ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனைக்கு 11-ம் தேதி மற்றும் 14-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, சட்டசபையில் காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று அம்மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மேற்கண்ட இரு தொகுதிகளிலும் 28-ம் தேதி காலை 7 மணியில் இருந்து மாலை 3 மணிவரை பதிவாகும் வாக்குகள் 31-ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி கியாங்ட்டே தெரிவித்துள்ளார். #Jharkhandassembly #Bypolls 
    Next Story
    ×