என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் மறுதேர்வு நடத்த சிபிஎஸ்இ உத்தரவு
Byமாலை மலர்28 March 2018 10:22 AM GMT (Updated: 28 March 2018 10:22 AM GMT)
கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் இரண்டு பாடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. #cbse #CBSEPaperLeak
புதுடெல்லி:
சிபிஎஸ்சி கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்த சிபிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்சி. பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பிற்கான கணிதப் பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற்றது. தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவியர் தெரிவித்தனர். இந்த தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதான புகார் எழுந்தது. அதே போல், கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது.
கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டை சிபிஎஸ்இ மறுத்திருந்த நிலையில், மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ-யின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், '12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். தேர்வு நடத்தப்படும் தேதி மற்றும் மற்ற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவித்திருந்தது.
சிபிஎஸ்இ தேர்வுகளின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் தொடர்ச்சியாக வெளியிடப்படுவதாக புகார் வந்தநிலையில், சிபிஎஸ்இ மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #cbse #CBSEPaperLeak
சிபிஎஸ்சி கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்த சிபிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்சி. பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பிற்கான கணிதப் பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற்றது. தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவியர் தெரிவித்தனர். இந்த தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதான புகார் எழுந்தது. அதே போல், கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது.
கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டை சிபிஎஸ்இ மறுத்திருந்த நிலையில், மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ-யின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், '12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். தேர்வு நடத்தப்படும் தேதி மற்றும் மற்ற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவித்திருந்தது.
சிபிஎஸ்இ தேர்வுகளின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் தொடர்ச்சியாக வெளியிடப்படுவதாக புகார் வந்தநிலையில், சிபிஎஸ்இ மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #cbse #CBSEPaperLeak
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X