என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாத்மா காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி
Byமாலை மலர்30 Jan 2018 6:44 AM GMT (Updated: 30 Jan 2018 6:44 AM GMT)
மகாத்மா காந்தியின் 70-வது நினைவு தினத்தன்று பிரதமர் மோடி, மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, நிர்மலா சீதாராமன் உட்பட பல அரசியல் தலைவர்கள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். #MartyrsDay #MahatmaGandhi
புதுடெல்லி:
தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவு தினமான இன்று பல அரசியல் தலைவர்கள் புதுடெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவத்தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி சுனில் லன்பா மற்றும் விமானப்படைத் தளபதி பிரேந்தர் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து டுவிட் செய்த பிரதமர் 'மகாத்மா காந்தி நினைவு நாளான இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாட்டிற்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்' என கூறினார். #tamilnews #MartyrsDay #MahatmaGandhi
தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவு தினமான இன்று பல அரசியல் தலைவர்கள் புதுடெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவத்தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி சுனில் லன்பா மற்றும் விமானப்படைத் தளபதி பிரேந்தர் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து டுவிட் செய்த பிரதமர் 'மகாத்மா காந்தி நினைவு நாளான இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாட்டிற்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்' என கூறினார். #tamilnews #MartyrsDay #MahatmaGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X