என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளா சிறையில் உள்ள கைதிகள் ஆதார் பெற சிறப்புக்குழு
Byமாலை மலர்27 Dec 2017 11:49 AM GMT (Updated: 27 Dec 2017 11:49 AM GMT)
கேரளா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் ஆதார் அட்டை பெறும் வகையில் சிறப்பு குழு ஒன்றை மாநில சிறைத்துறை அமைத்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள கைதிகள் ஆதார் அட்டை பெற சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிறையினுள் சென்று கைதிகளுக்கு ஆதார் வழங்கும் விதமாக மாநில சிறைச்சாலை அதிகாரிகள் இக்குழுவினை அமைத்துள்ளனர்.
சிறைச்சாலையில் ஆதார் இல்லாத கைதிகளின் பெயர்கள் பட்டியல் இடப்பட்டன. அவர்களுக்கு ஆதார் வழங்க சிறைக்குள் சிறப்பு முகாம்கள் போடப்பட்டு ஆதாருக்கு பெயர் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து தகுந்த ஆதாரங்கள் பெறப்பட்டன. மேலும் கைதிகளின் கைரேகை, புகைப்படத்தை பதிவு செய்ய ஸ்கேன்னர் மற்றும் கேமராவை அதிகாரிகள் சிறைக்குள் கொண்டு செல்கின்றனர்.
கேரளாவில் 3 மத்தியச்சிறைச்சாலை, 11 மாவட்ட சிறைகள், 16 துணை சிறைகள், 3 பெண்கள் சிறைச்சாலை மற்றும் 3 திறந்த சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 8 ஆயிரம் சிறைக்கைதிகள் உள்ளனர்.
நாட்டில் உள்ள அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கைதிகள் விடுதலையானாலும் அவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
கேரளாவில் உள்ள கைதிகள் ஆதார் அட்டை பெற சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிறையினுள் சென்று கைதிகளுக்கு ஆதார் வழங்கும் விதமாக மாநில சிறைச்சாலை அதிகாரிகள் இக்குழுவினை அமைத்துள்ளனர்.
சிறைச்சாலையில் ஆதார் இல்லாத கைதிகளின் பெயர்கள் பட்டியல் இடப்பட்டன. அவர்களுக்கு ஆதார் வழங்க சிறைக்குள் சிறப்பு முகாம்கள் போடப்பட்டு ஆதாருக்கு பெயர் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து தகுந்த ஆதாரங்கள் பெறப்பட்டன. மேலும் கைதிகளின் கைரேகை, புகைப்படத்தை பதிவு செய்ய ஸ்கேன்னர் மற்றும் கேமராவை அதிகாரிகள் சிறைக்குள் கொண்டு செல்கின்றனர்.
கேரளாவில் 3 மத்தியச்சிறைச்சாலை, 11 மாவட்ட சிறைகள், 16 துணை சிறைகள், 3 பெண்கள் சிறைச்சாலை மற்றும் 3 திறந்த சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 8 ஆயிரம் சிறைக்கைதிகள் உள்ளனர்.
நாட்டில் உள்ள அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கைதிகள் விடுதலையானாலும் அவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X