என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜி.எஸ்.டி. விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க வணிகர்களுக்கு கால அவகாசம்
Byமாலை மலர்29 Sep 2017 4:25 PM GMT (Updated: 29 Sep 2017 4:25 PM GMT)
ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க வணிகர்களுக்கு டிச.31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. விற்பனை வரி, நுழைவு வரி, ஆயத்தீர்வை, மாநில வரி, மாவட்ட வரி போன்ற பத்துக்கும் மேற்பட்ட பலமுனை வரிகளை ஒழித்து விட்டு அதற்கு மாற்றாக ஒரு முனை வரியான சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜி.எஸ்.டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பொருட்கள் அனைத்தும் ஜிஎஸ்டி முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க வணிகர்களுக்கு டிச.31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பில் உள்ள பழைய பொருட்களை டிசம்பர் 31-ம் தேதி வரை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்த நிலையில் மேலும் கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. விற்பனை வரி, நுழைவு வரி, ஆயத்தீர்வை, மாநில வரி, மாவட்ட வரி போன்ற பத்துக்கும் மேற்பட்ட பலமுனை வரிகளை ஒழித்து விட்டு அதற்கு மாற்றாக ஒரு முனை வரியான சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜி.எஸ்.டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பொருட்கள் அனைத்தும் ஜிஎஸ்டி முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க வணிகர்களுக்கு டிச.31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பில் உள்ள பழைய பொருட்களை டிசம்பர் 31-ம் தேதி வரை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்த நிலையில் மேலும் கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X