என் மலர்
செய்திகள்

ஜிஎஸ்டியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்றுங்கள்: டுவிட்டரில் நிதியமைச்சருக்கு கமல் கோரிக்கை
ஜிஎஸ்டி வரியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்ற வேண்டும் என்று டுவிட்டரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு நடிகர் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது.
இதனையடுத்து, ஜி.எஸ்.டி வரியால் சினிமா உலகம் பெரிதும் பாதிக்கப்படும் என்று நடிகர் கமல் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். மேலும், சினிமா மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றும் அழுத்தமாக கமல் தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்ற வேண்டும் என்று டுவிட்டரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு நடிகர் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் கூறியிருப்பதாவது:-
இது அழுத்தம் இல்லை. துன்பத்தில் இருக்கும் பிராந்திய சினிமாவின் கோரிக்கை. ஜி.எஸ்.டி வரியால் பிராந்திய மொழிப் படங்கள் அழிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பிராந்திய மொழிப் படங்களை காப்பற்ற ஜிஎஸ்டி கவுன்சில் அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.

Next Story






