என் மலர்tooltip icon

    இந்தியா

    குடும்பத்தினருடன் பேச அனுமதி கேட்டு ராணா மனு: 9-ஆம் தேதி விசாரிக்கும் டெல்லி நீதிமன்றம்
    X

    குடும்பத்தினருடன் பேச அனுமதி கேட்டு ராணா மனு: 9-ஆம் தேதி விசாரிக்கும் டெல்லி நீதிமன்றம்

    • ராணா திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • குடும்பத்தினருடன் பேச ஜெயில் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

    2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்புக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஹெட்லீ. இவருடைய நெருங்கிய கூட்டாளி தஹவுர் ஹுசைன் ராணா. இவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பேச அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

    சிறப்பு நீதிபதி சந்தர் ஜித் சிங், திஹார் ஜெயில் அதிகாரிகள் இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

    Next Story
    ×