search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பள்ளத்தாக்கில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து- 16 பேர் பலி
    X

    பள்ளத்தாக்கில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து- 16 பேர் பலி

    • பேருந்தில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. சைன்ஜ் பள்ளத்தாக்கில் உள்ள குல்லுவில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சைஞ்ச் நோக்கி அந்த பேருந்து சென்றுகொண்டிருந்தது. நியோலி-ஷான்ஷெர் சாலையில் உள்ள ஜங்லா பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலையில் இருந்து உருண்டு பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்து முற்றிலும் சிதைந்தது.

    பேருந்தில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    Next Story
    ×