என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நெல்லூர் அருகே சென்னையில் இருந்து காரில் கடத்திய 10 கிலோ தங்கம் பறிமுதல்
- நெல்லூர் மாவட்டம் வெங்கடாசலம் டோல்கேட்டில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- ஐதராபாத்தில் இருந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு தங்கம் கடத்தியது தெரியவந்தது.
திருமலை:
சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக தங்கம் கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம் வெங்கடாசலம் டோல்கேட்டில் நேற்று இரவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த கார் இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.79 கிலோ வெளிநாட்டு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில், ஐதராபாத்தில் இருந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு தங்கம் கடத்தியது தெரியவந்தது.
மேலும் இவர்கள் கடத்திச் செல்ல வேறொரு இடத்தில் பதுக்கி வைத்திருந்த 2.471 கிலோ தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டி.ஆர்.ஐ. அதிகாரிகள், தங்கம் கடத்திய 2 பேர் மற்றும் அதனை வாங்க வந்த ஒருவர் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர்.
சென்னையில் கடத்தல் தங்கம் எப்படி கிடைத்தது என விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்