என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
உலக மலேரியா தினம்... கொசுக்களை ஒழிக்க வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைப்பது அவசியம்
- இந்தியாவில் மலேரியாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15,000 என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
- மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்க அதற்கு மூலகாரணமான கொசுக்களை ஒழிக்க வேண்டும்.
இன்று உலக மலேரியா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மலேரியா காய்ச்சல் பரவுவதை தடுக்கவும், அதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏறபடுத்தவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மனிதர்களுக்கு வாழ்க்கையில் நோய், பிரச்சினை என எதுவாக இருந்தாலும் வந்தபின் காப்பதைவிட, வரும்முன் காப்பதே என்றும் சிறந்தது. அந்த வகையில் உலகில் மனிதர்களை ஏராளமான தொற்று நோய்கள், வைரஸ் காய்ச்சல்கள் அச்சுறுத்துகின்றன. இதில் மலேரியா காய்ச்சலும் ஒன்றாகும். அனாபிளஸ் வகை பெண் கொசுக்கள் கடிக்கும்போது மனிதர்களுக்கு மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது. அதாவது, அனாபிளஸ் வகை பெண் கொசு கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது 'பிளாஸ்மோடியம்' என்ற 5 வகையான ஒட்டுண்ணிகள் மனிதனின் ரத்தத்துடன் கலந்துவிடுகிறது. இதையடுத்து அந்த ஒட்டுண்ணிகள் ரத்தத்தின் சிவப்பணுக்களை தாக்கி மலேரியா காய்ச்சலை உண்டாக்குகிறது. மலேரியா காய்ச்சலின் அறிகுறிகளாக தலை சுற்றல், வாந்தி, சுவாசித்தலில் சிரமம், கடுங்குளிர் ஏற்படும்.
இந்த காய்ச்சலின் தீவிரத்தால் மரணம்கூட ஏற்படும். ஆனால் மலேரியா காய்ச்சலை முன்னரே அறிந்து தகுந்த சிகிச்சை பெற்றால் குணப்படுத்திவிடலாம். ஊட்டச்சத்து உணவுகள், பழங்கள் சாப்பிட்டு ரத்த சிவப்பணுக்களை வலுவடைய செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் மலேரியா காய்ச்சலை விரட்டலாம். இந்தியாவில் மலேரியாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15,000 என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மேலும் 2010-ல் ஒரு ஆண்டில் மட்டுமே உலகளவில் 6,55,000 பேர் மலேரியாவால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆவர்.
எனவே, மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்க அதற்கு மூலகாரணமான கொசுக்களை ஒழிக்க வேண்டும். இதற்கு நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மழைகாலங்களில் டயர், பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளில் மருந்து தெளித்து மூடிவைக்க வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். இரவு தூங்கும்போது அவர்களுக்கு கொசுவலை பயன்படுத்துவது நல்லது.
2007-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு, ஏப்ரல் 25-ந்தேதியை உலக மலேரியா தினமாக கடைப்பிடிப்பதாக அறிவித்தது. இதைதொடர்ந்து 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ந்தேதி உலக மலேரியா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்