search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    நவகிரகத்தை வசப்படுத்தலாம்...
    X

    நவகிரகத்தை வசப்படுத்தலாம்...

    • ஒன்றை நாம் தொடர்ந்து நினைத்தால், இயல்பாக அதனோடு நாம் உயிர் கலப்பு பெறுவோம். இது பிரபஞ்ச நியதி.
    • கவனிப்பதால் மனஅலை நீளமும் குறையும். இதை செய்வதற்கு உங்களுக்கு தேவை சற்று தனிமை.

    கோவில்களில் பார்த்து இருப்பீர்கள். ஒவ்வொரு கோள்களின் காந்த அலைக்கதிர் நிறத்திற்கு ஒத்த துணியை நவகிரகங்களுக்கு கட்டி இருப்பார்கள். சனிபகவானுக்கு சாம்பல் நிற அங்கவஸ்திரம் கட்டி இருப்பார்கள். சனியின் காந்த அலைக்கதிர்கள் சாம்பல் நிறம் என்பதை உணர்த்தவே முன்னோர்கள் அதை செய்து இருக்கிறார்கள்.

    பொதுவாக நவகோள்களின் காந்த அலை கதிர்கள், நமது உயிருக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உடையவை.

    சனி நம் நரம்புகளோடு தொடர்பு உடையது. சனியின் சாம்பல் நிற காந்த அலைக்கதிர்கள் ஆயுள், செல்வ வளம், உடல் நலம் அளிக்க வல்லது. தவத்தால் அதனோடு நட்பு பாராட்டி, அதனோடு உயிர் கலப்பு பெற்று, நமக்கு ஒத்ததாக மாற்றி கொள்ளலாம் என்று அருட்தந்தை பஞ்ச பூத நவக்கிரக தவத்தில் குறிப்பிடுவார்.

    ஒன்றை நாம் தொடர்ந்து நினைத்தால், இயல்பாக அதனோடு நாம் உயிர் கலப்பு பெறுவோம். இது பிரபஞ்ச நியதி. கவனிப்பதால் மனஅலை நீளமும் குறையும். இதை செய்வதற்கு உங்களுக்கு தேவை சற்று தனிமை.

    சனி என்ற கோளின் மீது மனம் செலுத்தி, அதன் சிறப்புகளை நினைவு கூர்தல், அவ்வளவுதான். உங்கள் எண்ணம் பிரபஞ்சமெல்லாம் விரிந்து, சனியோடு உறவாடி, உயிர் கலப்பு பெறும்.

    தேவையற்ற எண்ணங்களை புறந்தள்ளி விட்டு, நேரம் கிடைக்கும் போது நினைவு கூறலாம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும். உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர முடியும்.

    இது போல வார நாட்களில் அந்தந்த கோள்களை நினைவு கூர்தல், சற்று நேரம் அந்த கோள்களின் நினைவாக இருந்து, உயிர் கலப்பு பெறுதல் என்று பழக்கப்படுத்தி கொண்டால் வாழ்வு சிறக்கும்.

    Next Story
    ×