என் மலர்
கதம்பம்

குருவிகளின் கையில் உணவு உற்பத்தி
- குருவிகள் அழிந்ததும், உடனே பூச்சிகள் எண்ணிக்கை பெருகியது.
- இத்தனை நாளாக குருவிகளால் கட்டுப்பாட்டில் இருந்த பூச்சிகள் எண்ணிக்கை பெருகி அவை பல லட்சம் ஏக்கர் பயிர்களை அழித்தன.
1958 சீன அரசு கடும் கோபத்தில் இருந்தது. காரணம் குருவிகள் நாட்டின் ஒட்டுமொத்த தானிய உற்பத்தியில் 1% அளவை உண்பதாக அறிக்கைகள் கூறின.
1% என்பது பெரிய தொகை இல்லைதான். ஆனால் அதுவும் இழப்புதானே? ஏன் அதை இழக்கவேண்டும்? இந்த குருவிகளை அப்புறப்படுத்தினால் 1% உணவு உற்பத்தி பெருகும் அல்லவா?
நாட்டில் உள்ள குருவிகளை எல்லாம் சுட்டுக்கொல்ல உத்தரவு வந்தது. குருவிகளை கொல்லும் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மக்கள் குருவிகளை உண்டிவில், அம்புகள், துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி குருவி நூடில்ஸ் எல்லாம் செய்து சாப்பிட்டார்கள்.
அதன்பின் உணவு உற்பத்தி என்ன ஆனது?
குருவிகள் அழிந்ததும், உடனே பூச்சிகள் எண்ணிக்கை பெருகியது. இத்தனை நாளாக குருவிகளால் கட்டுப்பாட்டில் இருந்த பூச்சிகள் எண்ணிக்கை பெருகி அவை பல லட்சம் ஏக்கர் பயிர்களை அழித்தன. நாட்டில் கடுமையான உனவுப்பஞ்சம் வந்து 4.5 கோடி பேர் உயிரிழந்தார்கள். 20ம் நூற்றாண்டின் மிகக்கொடிய பஞ்சமாக அது அறியப்படுகிறது.
ஆக உயிரினங்கள் ஒன்றை ஒன்று எப்படி சார்ந்து உள்ளன என்பதை மனித இனம் இப்படி பெருத்த விலை கொடுத்துதான் தெரிந்துகொள்கிறது.
-நியாண்டர் செல்வன்






