search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    ஆறுபடையான ஆற்றுப்படை
    X

    ஆறுபடையான ஆற்றுப்படை

    • தமது வறுமையைப் போக்க, புலவர்கள் பொதுவாக மன்னர்களிடம் சென்று பாடி பொருள் பெறுவது அக்கால வழக்கம்.
    • அவ்வாறு பரிசு பெறுகையில் பரிசளித்த தலைவனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்துக் கூறுவர்.

    அறுபடை வீடு என்றால் என்ன?

    வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது..

    யோசித்ததுண்டா?

    விடை தேடனும்னா, முதல்ல நக்கீரரை தான் தேட வேண்டும்.

    ஏன்னா.. அவர்தான் முதன்முதலாக கடவுளைப்போற்றி நூல் எழுதியவர்.

    அதற்கு முன்.. இந்த உலகில் நிறைவான வாழ்க்கை வாழ மனிதனுக்கு ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், பாதுகாப்பு, ஆளுமை, அறிவு ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும்.

    இவைகளை பூர்த்தி செய்துதரும் பாஸிட்டிவ் வைப்ரேஷன் உள்ள இடங்களை கண்டுணர்ந்து அங்கு வீடுகள் எழுப்பப்பட்டன.

    அதாவது, 'ஆரோக்கியத்திற்கு திருவேரகம்,

    உறவுக்கு திருப்பரங்குன்று,

    பொருளாதார வசதிக்கு சோலைமலை,

    பாதுகாப்புக்கு சீரலைவாய்,

    ஆளுமை திறனுக்கு குன்றுதோறாடல்,

    ஞானம் பெற திருவாவினன்குடி'

    இவைதான் அந்த தலங்கள்.

    தமது வறுமையைப் போக்க, புலவர்கள் பொதுவாக மன்னர்களிடம் சென்று பாடி பொருள் பெறுவது அக்கால வழக்கம். அவ்வாறு பரிசு பெறுகையில் பரிசளித்த தலைவனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்துக் கூறுவர்.

    மேலும் பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள்.

    இவ்வாறு வழிப்படுத்துவதற்கு அல்லது நெறிப்படுத்துவதற்கு 'ஆற்றுப்படுத்துதல்' என்று பெயர்.

    ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்பதால் பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்கள் 'ஆற்றுப்படை நூல்கள்' எனப்பட்டன.

    பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த முருகனை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.

    தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் இதுவே. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான்.

    ஆற்றுப்படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் நக்கீரரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார். அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்..

    முத்தமிழ் கடவுள் முருகனின் அருமை பெருமைகளை பாராட்டி அவனிடம் 'இன்ன இன்ன' இடங்களுக்கு சென்றால் 'இதை இதை' பெறலாம் என்று பட்டியலிட்டு எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை.

    அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.

    -சமரன் நாகன்

    Next Story
    ×