என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
அழியாத இடம்பெற்ற முதல் காலடி
- அமெரிக்க அப்பல்லோ விண்கலத்தில் பைலட்டாக பணிபுரிந்தவர் ஆல்ட்ரின்.
- கோ பைலட்டாக சென்றவர் தான் நீல் ஆம்ஸ்ட்ராங்.
"ஆல்ட்ரின்... இவரைப் பற்றித் தெரியுமா?"
என அந்த கல்லூரி ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார்.
"தெரியாது சார்!"
"நீல் ஆம்ஸ்ட்ராங் தெரியுமா?"
"ஓ தெரியுமே, நிலாவில் முதல் காலடியை வைத்தவர்" என்றனர் கோரஸாக.
"நிலவில் முதலடியை எடுத்து வைத்திருக்க வேண்டியவர் இந்த ஆல்ட்ரின் தான்" என்று பேச்சைத் தொடங்கினார் அந்த ஆசிரியர்.
அமெரிக்க அப்பல்லோ விண்கலத்தில் பைலட்டாக பணிபுரிந்தவர் ஆல்ட்ரின். இவருக்கு கோ பைலட்டாக சென்றவர் தான் நீல் ஆம்ஸ்ட்ராங். அந்த விண்கலம் நிலவில் இறங்கியதும், சற்று நேரத்தில் நாசாவில் இருந்து,
"பைலட் ஃபர்ஸ்ட்!" என்று கட்டளை வந்தது.
ஆனால் ஆல்ட்ரினுக்கோ மனதில் ஒரு சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா, அல்லது வலது காலை எடுத்து வைப்பதா என்றல்ல. நிலவில் கால் பதிக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துக்கொண்டு போய்விட்டால்... என்பது போன்ற சில நொடிகளே ஆன... ஏதோ ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தினார்.
அதற்குள் நாசாவிலிருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டு விட்டது.
"கோ பைலட் நெக்ஸ்ட்!"
கட்டளை வந்த அடுத்த நொடியே நீல் ஆம்ஸ்ட்ராங் ஈகிள் என்ற அந்த கலத்திலிருந்து இறங்க ஆரம்பித்து விட்டார். கடைசி படியிலிருந்து தனது இடது காலை நிலவின் தரையில் அழுத்தமாக ஊன்றினார்.
அந்த முதல் காலடி அறிவியல் சரித்திரத்தில் அழியாத இடம் பெற்று விட்டது.
தகுதியும் திறமையும் இருந்தும் கூட தயக்கத்தின் தாமதத்தால் ஆல்ட்ரினை யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.
உலகில் எல்லா மனிதர்களும் வெற்றியை நோக்கித்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் வந்து வெற்றிப் படிகளில் நிற்பவர்களைத் தான் இந்த உலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.
'தயக்கமற்ற பேரார்வம் இன்றி எந்தப் பெரிய சாதனையையும் செய்ய முடியாது.'
- பரதன் வெங்கட்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்