search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    பத்திரிகையில் வெளியானதாக வலம் வரும் ஸ்கிரீன்ஷாட்
    X
    பத்திரிகையில் வெளியானதாக வலம் வரும் ஸ்கிரீன்ஷாட்

    வட்டியில்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கும் மத்திய அரசு?- தீயாய் பரவும் பத்திரிகை செய்தி

    விவசாயிகளுக்கு 9 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது என பொதுத்துறை வங்கி ஒன்று விளக்கம் அளித்துள்ளது.
    நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு வட்டியே இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கி வருகிறது என பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டதாக வெளியான ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகிறது

    இந்நிலையில் அந்த ஸ்கிரீன்ஷாட்டில் கூறப்பட்டுள்ள செய்தி உண்மையில்லை என தற்போது மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து பொதுத்துறை வங்கி ஒன்று அளித்த விளக்கத்தில், விவசாயிகளுக்கு 9 சதவீத வட்டியில் தான் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. 

    இந்த கடனுக்கு மத்திய அரசின் மானியத்தின் மூலமாக 2 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இதன்மூலம் விவசாயிகள் 7 சதவீத வட்டியில் கடன் பெற முடியும்.

    ஆனால் வட்டியில்லாத கடன்கள் வழங்கப்படுவதில்லை. பூஜ்ஜிய வட்டியில் வங்கி கடன் என்பது உண்மைக்கு புறம்பான செய்தி என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×