என் மலர்
செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடி டாக்சியில் பயணித்ததாக வைரலாகும் புகைப்படம்
இத்தாலி சென்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு டாக்சியில் பயணிக்க வைக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐந்து நாள் பயணமாக இத்தாலி சென்று இருக்கும் பிரதமர் மோடி அக்டோபர் 30 ஆம் தேதி போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்து பேசினார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியை டாக்சியில் பயணிக்க வைத்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் பிரதமர் மோடி டாக்சி லோகோ இடம்பெற்று இருக்கும் கார்களின் அருகில் நிற்கிறார்.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்துள்ளது. இதே புகைப்படங்கள் முன்னணி செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி வைரல் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டவை என உறுதியாகிவிட்டது.
Next Story