என் மலர்
செய்திகள்

அசாதுதீன் ஒவைசி
தேர்தல் கூட்டணி - வைரலாகும் ஒவைசி புகைப்படம்
உத்திர பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த தகவலுடன் ஒவைசி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேச மாநில தேர்தலில் போட்டியிட போவதாக அசாதுதீன் ஒவைசி அறிவித்த பின் அம்மாநில அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கி இருக்கிறது. தேர்தலில் இவர் களமிறங்கினால் மற்ற கட்சிகளின் வாக்கு சதவீதம் பெருமளவு குறையும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் துவங்கியுள்ளன. அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த நிலையில், ஒவைசி மற்றும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் சேர்ந்து உத்திர பிரதேச தேர்தல் வியூகம் குறித்து பேசியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் பவர்லூம் துறையினருடன் நடைபெற்ற சந்திப்பின் போது எடுக்கப்பட்டது ஆகும். இதே புகைப்படத்தை ஒவைசியும் தனது ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் வைரல் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
Next Story






