என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அந்த காரணத்திற்காக வீடுகள் இடிக்கப்பட்டதாக கூறி வைரலாகும் தகவல்
Byமாலை மலர்2 Sep 2021 5:12 AM GMT (Updated: 2 Sep 2021 5:12 AM GMT)
குடிசை பகுதியில் உள்ள வீடுகள் அந்த சம்பவத்தை தொடர்ந்து இடிக்கப்பட்டதாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் பகுதியில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவில், குடிசை பகுதியில் வீடுகள் இடிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. குடிசை பகுதியை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் கோசம் எழுப்பியதால், அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வீடுகளை இடிக்க உத்தரவிட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வீடியோவை ஆய்வு செய்ததில், அது உஜ்ஜைன் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் என்றும் அங்கிருப்பவர்கள் பாகிஸ்தான் கோசம் எழுப்பவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதே தகவலை அப்பகுதி காவல் துறை அதிகாரி ஒருவரும் தனியார் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அந்த வகையில் பாகிஸ்தான் கோசம் எழுப்பியதால், குடிசை பகுதியில் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டதாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X