search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சல்மான் கானை தடுத்து நிறுத்தும் காவலர்
    X
    சல்மான் கானை தடுத்து நிறுத்தும் காவலர்

    சல்மான்கானை தடுத்த அதிகாரிக்கு நேர்ந்த நிலை - வைரலாகும் தகவல்

    மும்பை விமான நிலையத்தில் நடிகர் சல்மான்கானை தடுத்த அதிகாரி குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.


    இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் டைகர் 3 படப்பிடிப்புக்காக ரஷியா செல்ல சில தினங்களுக்கு முன் மும்பை விமான நிலையம் வந்தார். அங்கு பாதுகாப்பு பகுதியில் அதிகாரிகளின் சோதனைக்கு நிற்காமல் உள்ளே நுழைய முயன்றார். 

    அவரை சி.ஐ.எஸ்.எப். இளம் அதிகாரி தடுத்து நிறுத்தி பாதுகாப்பு சோதனைகளை முடித்து உள்ளே வரும்படி அறிவுறுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பிரபல நடிகர் சல்மான்கான் என்பதை கண்டுகொள்ளாமல் கடமையை செய்ததாக அந்த அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்தன. 

    இந்த நிலையில் சல்மான்கானை தடுத்த அதிகாரி மீது சி.ஐ.எஸ்.எப். நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்து விட்டதாக வலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. இது குறித்த இணைய தேடல்களில் வைரல் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. 

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    மேலும் சி.ஐ.எஸ்.எப். அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அதிகாரி மீது நடவடிக்கை எடுத்ததாக வெளியான தகவல் பொய்யானது. உண்மையில் அந்த அதிகாரிக்கு கடமையை சிறப்பாக செய்ததற்கு வெகுமதி அளிக்கப்பட்டது'' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×