search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை
    X

    பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை

    கரூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    கரூர்:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    கரூர் பாராளுமன்றத் தொகுதியில் 9 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அவர் 3,20,678 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 537 வாக்குகள் பெற்றிருந்தார்.

    அமமுக வேட்பாளர் தங்கவேல் 11 ஆயிரத்து531 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 18 ஆயிரத்து 756 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் .ஹரிஹரன் 7920 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    Next Story
    ×