search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளச்சல் பகுதியில் பறக்கும் படை சோதனையில் ரூ.1½ லட்சம் பணம் பறிமுதல்
    X

    குளச்சல் பகுதியில் பறக்கும் படை சோதனையில் ரூ.1½ லட்சம் பணம் பறிமுதல்

    குளச்சல் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    குளச்சல்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    குளச்சல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ரீத்தாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ஷீலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாந்தகுமார், ரெகு தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக சென்ற கார்கள், இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் குறும்பனையைச் சேர்ந்த தம்பதி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 1½ லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அதனை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதுபோல குளச்சல் பகுதியில் இன்னொரு நபரிடம் ரூ.60 ஆயிரம் பணமும் கைப்பற்றப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 400 பணம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் இதுவரை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் மட்டும் ரூ. 2 கோடியே 33 லட்சத்து 76 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 623 கிராமம் தங்கமும், 1300 கிராமம் வெள்ளியும் கைப்பற்றப்பட்டுள்ளது. #LokSabhaElections2019

    Next Story
    ×