என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருமான வரி அதிகாரிகளை வரவேற்க காத்திருக்கிறோம் - ப.சிதம்பரம்
Byமாலை மலர்8 April 2019 5:11 AM GMT (Updated: 8 April 2019 5:11 AM GMT)
தனது வீட்டில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடைபெறலாம் எனவும், அவர்களை வரவேற்க காத்திருப்பதாகவும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். #PChidambaram #ITRaids
சென்னை:
இதேபோல் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி தனது டுவிட்டர் பதிவில், தனது வீட்டில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடக்கலாம் என பதிவிட்டுள்ளார்.
“எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம். எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள்” என டுவிட் செய்துள்ளார் ப.சிதம்பரம். #PChidambaram #ITRaids
பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோல் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி தனது டுவிட்டர் பதிவில், தனது வீட்டில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடக்கலாம் என பதிவிட்டுள்ளார்.
“எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம். எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள்” என டுவிட் செய்துள்ளார் ப.சிதம்பரம். #PChidambaram #ITRaids
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X