search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - வேட்புமனுக்கள் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது
    X

    பாராளுமன்ற தேர்தல் - வேட்புமனுக்கள் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது

    பாராளுமன்ற தேர்தலுக்காக இதுவரை 604 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது.

    அந்த வகையில் இதுவரை பாராளுமன்ற தேர்தலுக்காக 604 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 2 திருநங்கைகளின் மனுக்களும் அடங்கும்.



    அதேபோல 18 சட்டசபை இடைத்தேர்தலுக்காக இதுவரை 230 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019

    Next Story
    ×