search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் மாயம்
    X

    வாலிபர் மாயம்

    • வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜீவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பார்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் ஜீவா (வயது27). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 30-ம் தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதறிப்போன விஸ்வநாதன், தனது மகனை உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் காணவில்லை.

    இதுகுறித்து தந்தை விஸ்வநாதன் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜீவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×