என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு
- மாரசத்திரம் பகுதியில் உள்ள ஒரு ஏரியில் குளிக்க சென்றார்.
- அந்த வழியாக சென்றவர்கள் ஏரியில் நரசிம்மா பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் நரசிம்மா (வயது28).
இவர் நேற்று முன்தினம் மாரசத்திரம் பகுதியில் உள்ள ஒரு ஏரியில் குளிக்க சென்றார். அப்போது நரசிம்மா ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் ஏரியில் நரசிம்மா பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நரசிம்மாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






