என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    • கணவன்-மனைவி அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
    • சங்கர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொைல செய்து கொண்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கொடமாண்டப்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்.

    இவரது மகன் சங்கர் (வயது 42). இவரது மனைவி நதியா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி அடிக்கடி தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே குடும்பதகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த சங்கர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொைல செய்து கொண்டார். இதைபார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜ் மத்தூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×