search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாணார்பட்டி அருகே மீன்பிடி திருவிழாவில் மீன்களை அள்ளிச்சென்ற இளைஞர்கள்!
    X

    மீன்பிடி திருவிழாவில் போட்டிபோட்டு மீன்களை பிடித்த இளைஞர்கள்.

    சாணார்பட்டி அருகே மீன்பிடி திருவிழாவில் மீன்களை அள்ளிச்சென்ற இளைஞர்கள்!

    • சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மாங்குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
    • கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் திம்மணநல்லூர் ஊராட்சியில் தி.பள்ளபட்டி உள்ளது.இங்கு உள்ள மாங்குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் மாங்குளம் நிரம்பியது. விவசாயத்திற்கு மாங்குளம் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று ஊர் பொதுமக்கள் மாங்குளத்தில் அருகே உள்ள கருப்புசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன் பின்னர் மாங்குளத்திற்கு ஊர்வலமாக வந்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த மீன்பிடி திருவிழாவில் மணியக்காரன்பட்டி, ராமராஜபுரம், மந்தநாயக்கன்பட்டி,வேட்டைக்காரன் புதூர், திம்மணநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கிராமங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.

    சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக மாங்குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ஜிலேபி, விரால், கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன.

    கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    Next Story
    ×