என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

    • சத்யாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்தார்.
    • வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த குந்தியால்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சத்யா (வயது23), என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சத்யாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்தார். இதன்காரணமாக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் எந்த பலனும் அளிக்காததால் மனவேதனை அடைந்த சத்யா நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பர்கூர் போலீசார் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு சென்று சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3வருடங்கள் ஆனநிலையில் சத்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கணவர் சரவணன் மற்றும் அவரது உறவினர்களிடம் பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×