search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு  தர்ம அடி
    X

    சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு தர்ம அடி

    • ஜெயந்தியை தாக்கி அவர் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார்.
    • செல்வமுருகன் மீது கோவையில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளம் சந்தை தெருவை சேர்ந்தவர் ராஜகுமரன் மனைவி ஜெயந்தி (வயது 40).

    இவர் மாலை அப்பகுதியில் உள்ள பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்குவந்த அதே பகுதி மேலத் தெருவை சேர்ந்த செல்வமுருகன்(32) என்பவர் ஜெயந்தியை தாக்கி அவர் அணிந்திருந்த 11 பவுன்செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், நகை பறிப்பில் ஈடுபட்ட செல்வமுருகனைமடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் காயம் அடைந்ததையடுத்து, பொதுமக்களே அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துள்ளனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிந்து செல்வமுருகன் குறித்து விசாரணை நடத்தியதில் அவரது சொந்த ஊர் விளத்திகுளம் அருகே வேம்பார் எனவும், அவர் மீது கோவையில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன எனவும் கூறி உள்ளார்.

    மேலும் பெருமாள்குளத்தில் திருமணமாகி கடந்த 3 ஆண்டாக பெருமாள்குளத்தில் இருந்து சந்தை வியாபாரத்துக்கு சென்று வருவதும், தற்போது மீண்டும் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×