என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி : சிறுமியை திருமணம் செய்த வாலிபர்- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு
    X

    கோப்பு படம்

    ஆண்டிபட்டி : சிறுமியை திருமணம் செய்த வாலிபர்- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு

    • குழந்தை பிறந்த சிறுமிக்கு வயதை சரிபார்த்தபோது 16 வயது என்பதால் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரர்போதுமணிக்கு தகவல் கொடுத்தனர்.
    • புகாரின்பேரில் சிறுமியின் கணவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே பூதிப்புரம் வளையபட்டியை சேர்ந்தவர் கேசவன். இவருக்கும் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமண ஆசைவார்த்தை கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்துள்ளார்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. ஆஸ்பத்திரியில் அவரது வயதை சரிபார்த்தபோது 16 வயது என்பதால் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரர்போதுமணிக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில வாலிபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×