search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே பெட்ரோல் பங்க் கழிவறையில் வாலிபர் மர்மச்சாவு
    X

    கோப்பு படம்

    தேனி அருகே பெட்ரோல் பங்க் கழிவறையில் வாலிபர் மர்மச்சாவு

    • பெட்ரோல் பங்க் கழிப்பறைக்கு சென்ற வாலிபர் மயங்கி நிலையில் இறந்து கிடந்தார்.
    • மர்மமானமுறையில் வாலிபர் இறந்தது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த மொக்கைபாண்டியன் மகன் அஜித்குமார்(26). இவர் சொந்தமாக ஜீப் வைத்து கேரளாவில் ஏலத்தோட்டங்களுக்கு செல்பவர்களை அழைத்துச்செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று ஆணைமலையான்பட்டி பெட்ரோல்பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜீப்பை எடுத்து வருவதாக தனது வீட்டில் கூறிவிட்டு சென்றார்.

    அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் கழிப்பறைக்கு சென்றவர் வெளியே வரவில்லை. பங்க் ஊழியர்கள் கதவை திறந்து பார்த்தபோது அவர் மயங்கி நிலையில் கிடந்தார். உடனே அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் மூலம் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறந்த அஜித்குமார் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ்நிலையங்களில் உள்ளன. மர்மமானமுறையில் அவர் இறந்தது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×