search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு
    X

    கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு

    • அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் போதையில் தவறி விழுந்தார்.
    • நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் டேனியல் (வயது30). கூலித்தொழிலாளியான இவர் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் சம்பவத்தன்று மதுகுடித்து விட்டு போதையில் வீடடிற்கு வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் போதையில் தவறி விழுந்தார்.

    இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கிணற்றில் டேனியலின் உடல் மிதப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனே அங்கு விரைந்த டேனியல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×