என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிராக்டர் மோதி இளம்பெண் பலி
- சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோதியது.
- சிகிச்சை பலனின்றி இன்று காலை மாலா பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள நாகண்ட பள்ளியை சேர்ந்தவர் திம்மராயன். இவரது மகள் மாலா (வயது20). இவர் நேற்று முன்தினம் மளிகை பொருள் வாங்கி வருவதற்காக சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மாலாவை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மாலா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story