என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரையாண்டு, மொழித்தேர்வுகளுக்கு ஏப்ரல் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
- அரையாண்டு மற்றும் மொழித்தேர்வுகளுக்கு தேர்வர்கள் வருகிற ஏப்ரல் 3ம் தேதிக்குள் இணைவழியில் விண்ணப்பிக்கலாம்.
- குரல் தேர்வு வருகிற ஏப்ரல் 28-ந் தேதியன்று காலை 10 மணிக்கு சென்னையில் மட்டுமே நடைபெறும்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தினால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழித்தேர்வுகளுக்கு தேர்வர்கள் வருகிற ஏப்ரல் 3ம் தேதிக்குள் இணைவழியில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு ள்ளதாவது:
அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் அரையாண்டு மற்றும் மொழித்தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.
மேற்படி அரையாண்டு தேர்வுகள், அனைத்திந்திய பணிகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கென மொழித்தேர்வுகள் வருகிற ஏப்ரல் மாதம் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும், குரல் தேர்வு வருகிற ஏப்ரல் 28-ந் தேதியன்று காலை 10 மணிக்கு சென்னையில் மட்டுமே நடைபெறும்.
இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணையவழியில் மூலம் வருகிற ஏப்ரல் 3-ந் தேதி மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
தேர்வுகட்டணமாக பிரதிதேர்வு மொழிக்கு ரூ.5 எனவும், தட்டச்சு செய்ய ப்பட்ட எழுத்துப்பூர்வ மாக அனுப்ப ப்பட்ட நகலெடு க்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேற்படி தேர்வுகள் தற்போது பணியில் இருப்போரால் மட்டுமே எழுத இயலும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.






