search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழப்பாவூரில் விவசாயம் செழிக்க வேண்டி கொலு வைத்து வழிபாடு
    X

    கீழப்பாவூரில் விவசாயம் செழிக்க வேண்டி கொலு வைத்து வழிபாடு

    • கீழப்பாவூரில் வீடுகள் தோறும் கொழு பொம்மைகள் அலங்கரித்து வைத்து பூஜை செய்து வருகின்றனர்.
    • ஒவ்வொரு சிலைகளும் ஒவ்வொரு கலைகளை பறைசாற்றும் வகையில் அமைந்தது.

    தென்காசி:

    தசராவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய வகையாக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் வீடுகள் தோறும் கொழு பொம்மைகள் அலங்கரித்து வைத்து தினமும் பூஜை செய்து வருகின்றனர். கொலு பொம்மைகளில் முக்கிய சாமி சிலைகள் மற்றும் முனிவர்கள், தலைவர்கள் சிலைகள்,கலைகளை பறைசாற்றும் வண்ணம் மேள தாளங்களுடன் இசை இசைக்கும் வண்ணம் அமைக்கப்பட்ட சிலைகள் வனவிலங்குகள், கண்ணன் ராதையுடன் தொட்டிலில் நிற்கும் வண்ணம் அமைக்கப்பட்ட சிலைகள் என ஒவ்வொரு சிலைகளும் ஒவ்வொரு கலைகளை பறைசாற்றும் வகையில் அமைந்தது. குறிப்பாக இந்த ஆண்டு விவசாயம் தென் மாவட்டங்களில் போதிய அளவில் இல்லாததன் காரணமாக விவசாயம் செழிக்க வேண்டி அதனை எடுத்துரைக்கும் வண்ணம் மாடுகளுடன் விவசாயி செல்வது போன்று அமைக்கப்பட்ட கொலு சிலையானது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    Next Story
    ×