என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.
தும்பல் வனச்சரகத்தில் உலக வன நாள் விழா
- வாழப்பாடி அடுத்த தும்பல் வனச்சரகத்தின் சார்பில், புழுதிக்குட்டை ஊராட்சி கீரைப்பட்டி மலை கிராமத்தில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவிற்கு, தும்பல் வனச்சரகர் விமல் குமார் தலைமை வகித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த தும்பல் வனச்சரகத்தின் சார்பில், புழுதிக்குட்டை ஊராட்சி கீரைப்பட்டி மலை கிராமத்தில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, தும்பல் வனச்சரகர் விமல் குமார் தலைமை வகித்தார். வனத்தால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள், பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம், காடு வளர்ப்பு மற்றும் காட்டுத் தீ பரவல் தடுப்பு, வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து, வனவர்கள் ஸ்ரீகணேஷ், ராஜேஸ்கண்ணா மற்றும் வனக்காவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வனத்தையும், வன விலங்குகளை பாதுகாப்பதென வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Next Story






