என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் உலக சுற்றுச் சூழல் தினம்
- பேரூராட்சி பூங்காவில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனத்துறை சார்பில், உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு தாசில்தார் அலுவலகம் மற்றும் லக்க சந்திரம் அருகே உள்ள பேரூராட்சி பூங்காவில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் சரவண மூர்த்தி, வனச்சரக அலுவலர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
அதேபோல் லக்கசந்திரம் கிராமம் அருகே பேரூராட்சி பூங்கா, பள்ளி வளாகங்களில் வனத்துறை சார்பில் பல் வேறு வகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.
Next Story






