search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் அருகே எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி: இன்ஸ்பெக்டர் லில்லி துவக்கி வைத்தார்
    X

    மாமல்லபுரம் அருகே எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி: இன்ஸ்பெக்டர் லில்லி துவக்கி வைத்தார்

    • திருப்போரூர் பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 180 பேர் கலந்து கொண்டனர்.
    • மாணவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி, துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையனூரில் உள்ள ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் பிரிவின் சார்பில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் திருப்போரூர் பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 180 பேர் கலந்து கொண்டனர். மாணவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி, துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.

    டீன் டாக்டர் செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் லில்லி ஆகியோர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். டாக்டர் சாந்தகுமார், கல்லூரி இயக்குனர் வைஷ்ணவதேவி, பத்மநாபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×