search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளியின்  ஸ்கூட்டரை தீ வைத்து எரித்தவர் கைது
    X

    தொழிலாளியின் ஸ்கூட்டரை தீ வைத்து எரித்தவர் கைது

    • மணிகண்டன் (வயது 31). கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே தெருவில் வசித்து வரும் பரமசிவம் (30) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • முன் விரோதத்தை மனதில் வைத்து கொண்டு பரமசிவம் மணிகண்டனின் ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு, கேபி கரடு தென்புறம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே தெருவில் வசித்து வரும் பரமசிவம் (30) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்து கொண்டு பரமசிவம் மணிகண்டனின் ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் வண்டி எரிந்து சேதமடைந்தது.

    இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் பரமசிவத்தை நேற்று கைது செய்தனர்.

    Next Story
    ×