என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் மோதி தொழிலாளி காயம்
- எதிரே வந்த சொகுசு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தார்.
- போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரி மங்கலம் அருகே பந்தார அள்ளியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 40). கூலி தொழிலாளி.
இவர் கடந்த 28-ம் தேதி கொள்ளுபட்டியில் உள்ள தனது மனைவியை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் - திப்பம்பட்டி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்,
தெல்லன அள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சொகுசு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து இன்று சிவலிங்கம் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரிமங்கலம் போலீ சார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






